தமிழகம் முழுவதும் உள்ள நெசவாளர்களின் ஹீரோவாக உயர்ந்துள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்….
மாவட்ட ஆட்சியாளராக இருந்த போது அவர் செய்த சாதனைகள் ஏராளம். கிரானைட் மோசடியை அம்பலப்படுத்தி இந்தியா முழுவதும் பிரபலமான ஐ.ஏ.எஸ் அதிகாரியானர்.
தற்போது கோ.ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு லாபத்தில் செயல்பட வைத்திருக்கிறார்.
கடந்த ஆண்டில் மட்டும் கோ-ஆப்டெக்ஸ் ரூ.245 கோடிக்கு வர்த்தகம் பார்த்திருக்கிறது. இதில் லாபம் மட்டுமே ரெண்டே கால் கோடி ரூபாய். இந்த ஆண்டு விற்பனை இலக்கு ரூ.350 கோடி; லாபம் ரூ.15 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை நெசவாளர்களுக்கு பகிர்ந்தளித்து ஹீரோவாகிவிட்டார் சகாயம்.
Comments
Your Turn To Talk